Monday, June 29, 2009

'கடா வெட்டா' பண்ணிட்டேன்?

'கடா வெட்டா' பண்ணிட்டேன்? ============================ தன் குடும்ப டாக்டர் வெளிநாடு போயிருந்த சமயம் பார்த்து (அதான் தனக்கு 'பாதுகாப்பான'து என்று நினைத்து) இன்னொரு டாக்டரிடம் "மூல அறுவை சிகிச்சை" செய்துகொண்டார் ஒருவர். திரும்பி வந்த டாக்டர் அதை யார் மூலமோ அறிந்து கொண்டு, அவரிடம் கேட்டார்: "என்கிட்டே ஒரு வார்த்தைகூட சொல்லவே இல்லையே நீங்க..?" பேஷண்ட் சொன்னார்: "என்ன டாக்டர்...நானென்ன ""கடா அறுத்தா கறிசோறு போட்டேன்...ஊருக்கெல்லாம் சொல்லி செய்யறதுக்கு?" வாயை மூடிக்கொண்டார் டாக்டர்! -கிரிஜா மணாளன்

Saturday, January 31, 2009

எங்கள் கண்ணீர் அஞ்சலி!

திரைவானில் 'நகைச்சுவை ஒளி' வீசி அனைவரையும் மகிழ்வித்த மாபெரும் நட்சத்திரம் "நாகேஷ்" இன்று மறைந்த செய்தி கேட்டு கண்ணீர் வடிக்கிறோம். அவரது ஆன்மா அமைதிபெற எங்களது பிரார்த்தனைகள். - கிரிஜா மணாளன் - தஞ்சை தாமு உறுப்பினர்கள், தஞ்சை மகிழ்வோர் மன்றம் (Humour Club Of Thanjavur) தஞ்சாவூர்.

Wednesday, November 5, 2008

அதுக்காகத்தான்!

(இரு மாணவர்கள்) "ஏன்டா எப்பவுமே ஹோம் ஒர்க்ல கணக்கை தப்பாப் போட்டுட்டு வர்றே?" "அப்பத்தான்டா 'கமலா' டீச்சர் கன்னத்தைப் புடிச்சிக் கிள்ளுவாங்க!" - மோகன்ராஜ் திருப்பூர், தமிழ்நாடு.

Monday, October 6, 2008

சும்மா சிரிச்சு வையுங்களேன்!

1. "ஏன்யா தரகரே, பொண்ணு பிடிக்கலேன்னு எழுதினதுக்காக நாங்க சாப்பிட்ட டிபனுக்கு பில் அனுப்பிச்ச மாப்பிள்ளை வூட்டுக்காரங்க, அதென்ன கடைசில T$B அஞ்சு ரூபான்னு போட்டுருக்கானுங்க?" "அவங்க வூட்டுல நீங்க 'டாய்லெட்' போனதுக்கான சார்ஜ் சார்!"------------- 2. "அந்த வட்டிக்கடை சேட்'டை இனிமே சாயங்காலத்துல வாக்கிங் போகச்சொல்லி சொல்லுங்களேன் டாக்டர்!" "அவர் காலைல போனா உமக்கென்னய்யா?" "என் பின்னாலேயே விரட்டிக்கீட்டு வந்து, வட்டி பாக்கியை கேக்கறானே டாக்டர்!"------------ 3. "ஐயோ....! எங்க அம்மா தூங்கிக்கிட்டு இருக்கற கட்டில் மேல ஒரு பாம்பு ஏறுதுங்க! ஓடிப்போய் அவங்கள எழுப்புங்களேன்!" "சும்மா இருடி!..........அசந்து தூங்கறவங்கள பாதில எழுப்பறது மகா பாவம்!"--------- - ஆர். ராஜ்குமார், திருவெறும்பூர்.

Tuesday, September 23, 2008

ஐயோ........இந்த டாக்டரா?

ரோட்டுல அடிபட்டுக் கிடந்த ஒருவனை நாலு பேர்கள் தூக்கி வந்து எதிரில் இருந்த ஒரு டாக்டர் வீட்டு வாசலில் படுக்கவைத்துவிட்டு, டாக்டர் இருக்காரான்னு பார்க்க உள்ளே போனார்கள். ஒருவன் மட்டும் அவன் பக்கத்துல நின்னுக்கிட்டுருந்தான். கொஞ்ச நேரத்துல டாக்டர் வெளியே வந்தார். மயக்கமா படுத்துக்கிடந்தவ்னை காணோம்! டாக்டர் கேட்டார்: "எங்கேப்பா பேஷண்ட்?" வெளியே நின்னுக்கிட்டுருந்தவன் சொன்னான்: " அவன் எழுந்து ஓடிப்போயிட்டான் டாக்டர்!" "ஏம்பா ஓடினான்?" "மயக்கம் தெளிஞ்சதும் முழிச்சு சுத்து முத்தும் பார்த்தான் டாக்டர்...அதோ இருக்கற உங்க 'பெயர்ப் பலகை' யைப் பாத்துட்டு.... "ஏன்டா பாவிகளா.....இந்த ஆளுக்கிட்டேயா என்னை தூக்கிக்கிட்டு வந்தீங்க? அதுக்கு அங்கேயே செத்துப்போயிருப்பேனேடா! .."ன்னு கத்திட்டு, தலைதெறிக்க ஓடிப்போயிட்டான் டாக்டர்!" டாக்டர் நெஞ்சைப் பிடிச்சுக்கிட்டு கீழே சாஞ்சார். அவரைத்தூக்கிக்கிட்டு இன்னொரு டாக்டரைத் தேடி ஓடினாங்க அவங்க! - கிரிஜா மணாளன்.

Wednesday, September 17, 2008

சும்மா சிரிச்சு வையுங்களேன்!

1. ஜட்ஜ் குற்றவாளியைப் பார்த்துக் கேட்டார். "ஏம்பா, மூணாவது தடவையா இந்த கோர்ட்டுக்கு வந்துருக்கீயே......உனக்கு வெக்கமாயில்லே?" குற்றவாளி கேட்டான்: " நீங்க தினமும் வர்றீங்களே...ஒங்களுக்கு வெக்கமாயில்லையா சார்?" ================================================ 2. நண்பன் கேட்டான்: "நேத்து உன் பின்னால 'பைக்'ல உக்காந்து வந்தது...உன் 'லவ்வரா'? "ச்சே! அவ என் ஒய்ஃப்டா!...ஏன் கேக்கறே?" " அவ்வளவு நெருக்கமா உன் இடுப்புல கட்டிப்புடிச்சிக்கிட்டு உக்காந்திருந்ததைப் பாத்துத்தான் கேட்டேன்!" ================================================ 3. அதிகாரி கேட்டார்; "வெள்ளத்தால அந்த கிராமத்துல உயிர்ப்பலி ஆயிடக்கூடாதேன்னு தானே வெள்ளத்தடுப்புக்கு மணல் மூட்டைகளைப் போடச்சொல்லி அனுப்பினேன்.....எப்படி நாலு உயிர்ப்பலி ஆச்சு?" பணியாள் ஒருவன் சொன்னான்: " அவசரமா மூட்டைகளைத் தூக்கிப்போடறப்ப......வேலை செஞ்சிக்கிட்டுருந்த நம்ம ஆட்கள் மேலேயே தூக்கிப்போட்டுட்டோம் சார்!!" ================================================ 4. பையனின் தந்தையிடம் ஆசிரியர் சொன்னார்: "உங்க பையனோட கையெழுத்தை இன்னிக்கு பூரா பாத்துக்கிட்டே இருக்கலாம் சார்!" பூரிப்படைந்த தந்தை கேட்டார்: " அட! அவ்வளவு அழகா எழுதுவானா!" ஆசிரியர் சொன்னார்: "ஹும், எழுத்து புரிஞ்சாத்தானே மேலே படிக்கறதுக்கு! அதான் நாள் பூரா பாத்துக்கிட்டே இருக்கலாம்னேன்!" ================================================ - கிரிஜா மணாளன்.

Tuesday, September 16, 2008

இதயமார்ந்த நன்றி! 14.09.2008 அன்று சென்னை-அம்பத்தூர் நகைச்சுவை மன்றம் சார்பில், பிரபல நகைச்சுவை வேந்தர் திரு. பாக்கியம் ராமசாமி (ஜ.ரா.சுந்தரேசன்) அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் நமது நகைச்சுவை வலைத்தளங்கள் சார்பில் ரசிகர்களுக்கு வழங்கப்பட்ட "சிரிப்போம்! சிறப்போம்!!" என்னும் சிற்றிதழைப் பாராட்டி எனக்கு மின்னஞ்சல் அனுப்பியும், தொலைபேசியில் பாராட்டியும் மகிழ்ந்த திரு "பாக்கியம் ராமசாமி' அவர்களுக்கும், மன்ற செயலாளர் திரு எஸ். சம்பது ("சிரிப்பானந்தா') அவர்களுக்கும், மற்றும் நண்பர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். - கிரிஜா மணாளன். ===================================================== Dear Manalan, Your periodical on Ambattur Humour Club was very much appreciated by one and all. Thank you for the endevours you are taking every time. About 30 copies were distributed at the meeting. The meeting went very well. - Ja.Ra.Su.(Packiyam Ramasami) =====================================================